» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவலர் தினம் விழிப்புணர்வு பேரணி : எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்!
சனி 6, செப்டம்பர் 2025 3:49:28 PM (IST)

தூத்துக்குடியில் காவலர் தினத்தை முன்னிட்டு காவல்துறை வாகனங்களின் விழிப்புணர்வு பேரணியை எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்.
1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் காவலர் நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று (06.09.2025) காவலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்திற்கு சென்று காவலர் தின உறுதிமொழி ஏற்றும் பின்னர் துப்பாக்கி சுடுதள வளாகத்தில் 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்ட மரம் நடுவிழாவிற்கு தலைமை தாங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் மரம் நட்டி காவலர் தினத்தை சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து காவலர் தினத்தை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பாக இருந்து 14 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 15 இருசக்கர காவல்துறை வாகனங்களின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்வுகளின் போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சி. மதன், ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதிர், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










