» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பில் இயந்திரம், மூலப் பொருட்கள் சேதம்!

சனி 6, செப்டம்பர் 2025 3:29:40 PM (IST)



கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரம் மற்றும் மூலப் பொருட்கள் எரிந்து சேதமாகின. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி திட்டங்குளத்தில் உள்ள தொழிற்பேட்டையில் முத்தையம்மால் தெருவைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன்  என்பவர் சாய்ராம் மேட்வின் என்ற பெயரில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இன்று பணியாளர்கள் வழக்கம்போல பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில்  திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. 

இதனைப் பார்த்த பணியாளர்கள் அவசரமாக வெளியேறினர். மேலும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரம் மற்றும் மூலப் பொருட்கள் எரிந்து சேதமாகின. தீ விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory