» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சந்திர கிரகணம்: கோவில்களில் பூஜை நேரம் மாற்றம்
சனி 6, செப்டம்பர் 2025 10:58:22 AM (IST)
சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை (செப்.7) ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது.
நாளை (செப்டம்பர் 7ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை, வானில் அரிய வகை முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் 82 நிமிடங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகணம், சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் ஏற்படுகிறது.
இந்த நிகழ்வின் போது, சந்திரன் அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும். செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இது நள்ளிரவு 12.23 வரை நீடிக்கும். இந்த முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். வானம் தெளிவாக இருந்தால், இந்த அரிய நிகழ்வை பொதுமக்கள் முழுமையாக கண்டு ரசிக்கலாம்.
இந்த நிலையில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை (செப்.7) ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மாலை 5 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெற்ற பின்னர் நடை திருகாப்பிடப்படுகிறது. அன்றைய தினம் கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் தரிசன வரிசை மற்றும் பொது தரிசன வரிசை நுழைவு பகுதியில் மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இரவு 9:47 முதல் நள்ளிரவு 1.23 வரை சந்திர கிரகத்தை முன்னிட்டு இரவு ஏழு மணிக்கு அனைத்து கோவில்களும் நடை சாத்தப்படுகிறது மீண்டும் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பரிகாரங்கள் செய்யப்பட்டு கோவில்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தூத்துக்குடி சிவன் கோவிலில் இரவு 7 மணிக்கு நடை சாத்தப்படுகிறது மீண்டும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










