» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லரில் தவறி விழுந்து ஊழியர் உயிரிழப்பு!

சனி 6, செப்டம்பர் 2025 8:50:17 AM (IST)

தூத்துக்குடி அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச் சாலை அருகே மேல அரசரடி ஊராட்சிக்கு உள்பட்ட மேலமருதூரில் தனியார் மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 2-ஆவது அலகில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த 10 நாள்களாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதில் ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில், நேற்று பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, மத்திய பிரதேச மாநிலம், அனூப்பூர் பீடு பகுதியைச் சேர்ந்த ராஜூபிரசாத் (44), பீஸ்கம் சிங் ரத்தோர் (36) ஆகியோர் எதிர்பாராத விதமாக பாய்லரில் தவறி விழுந்தனர்.

இருவரையும் மீட்ட சக ஊழியர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில்,ராஜூ பிரசாத் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பீஸ்கம் சிங் ரத்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory