» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை திறப்பு

சனி 6, செப்டம்பர் 2025 8:41:36 AM (IST)



தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை திறப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி வ.உசி. துறைமுக சதுக்கம் (வ.உ.சிதம்பரனார் சிலை) பகுதியில் நடைபெற்ற விழாவில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் கலந்துகொண்டு பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, ரூ.350 கோடி மதிப்பில் துறைமுகத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர், அமைச்சர் முன்னிலையில், தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம், கப்பல் சரிசெய்யும் மையம் அமைப்பதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, வ.உ.சிதம்பரனார் பிறந்த தினத்தை முன்னிட்டு, துறைமுக வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், மத்திய கப்பல் துறைமுகங்கள், நீர்வழிப் போக்குவரத்து துறை செயலர் டி.கே.ராமச்சந்திரன், துணைச் செயலர் ராஜேஷ்குமார் சின்ஹா, வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்த்குமார் புரோஹித், துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தர்ராஜன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு சிப்காட் மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory