» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு : 2 சிறார்கள் கைது

சனி 6, செப்டம்பர் 2025 8:32:35 AM (IST)

கோவில்பட்டியில் மயானத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறார்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மாரிச்செல்வம் (31). ஆட்டோ ஓட்டுநராகவும், அப்பகுதி சந்தன மாரியம்மன் கோயில் பூசாரி ஆகவும் இருந்து வந்தார். இந்நிலையில், சண்முகா நகரில் உள்ள மயானத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இத்தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்தனர். 

அதில், 17 வயது சிறுவர்களான கடலையூர் சாலை சண்முகா நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்த சிறுவன், கைவண்டி தொழிலாளர் காலனி, சந்தன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சிறுவன் ஆகியோர் சேர்ந்து சம்பவத்தன்று இரவு மாரி செல்வத்தை மயானத்தில் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. 2 சிறார்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கைவண்டி தொழிலாளர் காலனியை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் முருகனிடம் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே மாரிச்செல்வத்தின் உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory