» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி புனித லசால் பள்ளியில் ஆசிரியர் தின விழா

வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:55:31 PM (IST)



தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியில் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோ. ஜான் பாலுக்கு சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. நல அறக்கட்டளை நிறுவனர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற செயலாளர் காமாட்சி முருகன் வரவேற்று பேசினார். 

விழாவிற்கு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். மின்வாரியத் துறை ஜேஇ டேவிட் சாலமன் அலெக்சாண்டர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கவிஞர் நெடுஞ்சாலை செல்வராஜ் ஆசிரியர் தின வாழ்த்து கவிதை வாசித்தார். அருட்சகோ. ஜான்பால் ஏற்புரை வழங்கினார். நிறைவாக அருட்சகோ சேகர் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

முனைவர் முருகன்Sep 6, 2025 - 09:39:37 AM | Posted IP 104.2*****

நல்ல செய்திகளை நயமுடன் மக்கள் பார்வைக்கு கொண்டு வரும் tuty online

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory