» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆவணி பொங்கல் திருவிழா மாட்டு வண்டி எல்கை பந்தயம்: சீறிப்பாய்ந்த காளைகள்!

வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:11:50 PM (IST)



விளாத்திகுளம் அருகே ஆவணி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பி. வெங்கடேஸ்வராபுரம் கிராமத்தில் காளியம்மன், அய்யனார், கருப்பசாமி திருக்கோவில் ஆவணி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 2-ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சின்னமாடு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.

திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 42 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தய சாலை குறுகலாக இருந்தாலும் மாட்டு வண்டி சாரதிகள் மற்றும் பின்சாரதிகள் வெற்றி இலக்கை நோக்கி நேர்த்தியாக மாட்டு வண்டிகளை ஒட்டிய காட்சிகள் மாட்டு வண்டி பந்தைய ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தது.

இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை புதூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவருமான தனஞ்செயன், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் மோகன் மற்றும் விழாக்கமிட்டியினர் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory