» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் ஆசிரியர் தின விழா: கீரீடம் சூட்டி மரியாதை செய்த மாணவிகள்!

வெள்ளி 5, செப்டம்பர் 2025 12:29:15 PM (IST)



கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் பள்ளி மாணவிகள் ஆசிரியர்களுக்கு கிரீடம் சூட்டி மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் செப்டம்பர் 5ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் முத்துச்செல்வம், ஆசியா பார்ம்ஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பள்ளி உதவி தலைமையாசிரியை கிரேனா அனைவரையும் வரவேற்றார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதாவுக்கு ரோட்டரியின் மதிப்புமிகு தலைமை ஆசிரியர் விருதினை ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பரமேஸ்வரன் வழங்கி பாராட்டி பேசினார். இதில் ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவிகள் கிரீடம் சூட்டி மரியாதை செய்தனர்.

இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து முருகன், தாமோதரக் கண்ணன், மணிகண்டன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் உள்பட ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக இசை ஆசிரியை அமல புஷ்பம் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory