» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் மிலாது நபி விழா சிறப்பு பிரார்த்தனை

வெள்ளி 5, செப்டம்பர் 2025 12:15:25 PM (IST)



தூத்துக்குடியில் பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மிலாது நபி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 

தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மிலாது நபி விழாவை முன்னிட்டு தொடர்ந்து 12 நாட்கள் குர்ஆன் ஓதப்பட்டது.  இதை தொடர்ந்து இன்று அதிகாலையில் அரசு காஜி முஜிபுர் ரகுமான்,  தலைமையில் விவசாயம் செழிக்க மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் மதரஷா முதல்வர் இம்தாதுல்லா, ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆழிம், சதக்கத்துல்லா, ஆகியோர் சிறப்பு துவா ஓதப்பட்டு அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில்  மதரஷா  துணை முதல்வர்  அஸ்ராத் அகுமது, ஜாமியா பள்ளிவாசல் முன்னாள் தலைவர் மீராசா, முன்னாள் செயலாளர் எம் எஸ் எப் ரகுமான், முன்னாள் துணைத் தலைவர் சாகுல் சிராஜுதீன்,  முன்னாள் பொருளாளர் செய்யது இப்ராஹிம் மூசா, முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஜுபைர்,  முகமது உவைஸ் அப்துல் ஷெரிஃப்,  முகமது அசின்,
பேராசிரியர்கள் செய்யது அப்பாஸ், அத்துல் கனி,  தாசுதீன், அபூபக்கர் சித்திக்,  முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவர் ஏ.கே. மைதீன், சுலைமான் , அர்ரஹ்மானிய நற்சேவை மன்ற தலைவர்  முகமது குட்டி,  பள்ளிவாசல் காம்ப்ளக்ஸ் மீராசா,  உள்ளிட்ட  ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory