» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுடுகாட்டில் ஆட்டோ டிரைவர் கொலை: போலீசார் விசாரணை

வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:32:07 AM (IST)

கோவில்பட்டி அருகே சுடுகாட்டில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் கணேசன் மகன் மாரிச்செல்வம் (31). இவர் கோவில்பட்டி ரயில் நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில்  இன்று காலையில் சண்முகா நகர் சுடுகாட்டில் ஆட்டோ டிரைவர் மாரிச் செல்வம் முகம், மூக்கு பகுதியில் வெட்டுப்பட்ட ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். 

இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory