» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயிலில் உண்டியல் வருமானம் ரூ. 2.48 கோடி

வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:02:09 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருமானம் ரூ. 2.48 கோடி கிடைத்தது. மேலும், 1 கிலோ 102 கிராம் தங்கம் கிடைத்துள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தக்கார் ரா.அருள்முருகன் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி கோயில் மண்டபத்தில் நடந்தது. இணை ஆணையர் சு.ஞானசேகரன் முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் செந்தில்குமார், நாகவேல், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில் நாயகி, பிரதிநிதிகள் வேலாண்டி, கருப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்படி உண்டியல் எண்ணிக்கையில் 2 கோடியே 48 லட்சத்து 94 ஆயிரத்து 901 ரூபாயும், தங்கம் 1 கிலோ 102 கிராம், வெள்ளி 14.1 கிலோ, பித்தளை 29 கிலோ, செம்பு 4.5 கிலோ, தகரம் 7.5 கிலோ மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 895-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory