» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கண் தானம் விழிப்புணர்வு பேரணி

வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:50:11 AM (IST)



தூத்துக்குடியில் அரவிந்த கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை மத்திய அரசு நோட்டரி பப்ளிக், தமிழக அரசு விதவை & ஆதரவற்ற பெண்கள் நலவாரிய மாநில உறுப்பினர் வழக்கறிஞர் எஸ். சொர்ணலதா துவக்கி வைத்தார். பேரணி, எஸ்.ஏ.வி பள்ளியில் இருந்து துவங்கி காந்தி சிலை வழியாக மீண்டும் எஸ்.ஏ.வி பள்ளியிலேயே நிறைவடைந்தது. 

எஸ்.ஏ.வி பள்ளி மாணவர்கள் மற்றும் அரவிந்த கண் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டு, "கண் தானம் – வாழ்க்கை தானம்” என்ற முழக்கங்களை எழுப்பி, பல்வேறு வாசக பலகைகள் மூலம் விழிப்புணர்வை பரப்பினர். பேரணியின்போது மக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. கண் தானம் மூலம் தேவையற்ற  பார்வை இழப்பை ஒழிக்கலாம் என பொதுமக்கள் அனைவரும் கண் தானத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory