» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும்: மேயர் உத்தரவு

வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:46:56 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியில் மழை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார். 

தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் மாநகராட்சி அரங்கத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பேசுகையில் : செப்டம்பர் மாதம் இறுதியில் மழைக்காலம் தொடங்கி விடும். தசரா விடுமுறை பத்து நாட்கள் நடைபெறும். ஆகையால் மாநகராட்சியில் பணிகளை எடுத்த ஒப்பந்தக்காரர்கள் பணிகளை விரைவாக நல்லமுறையில் முடிக்க வேண்டும். 

மக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாநகராட்சியில் பணிகளை எடுத்த ஒப்பந்தக்காரர்கள் உடனடியாக பணிகளை நல்லமுறையில் முடிக்க வேண்டும். அதற்கான காலக்கெடுகளை ஒவ்வொரு ஒப்பந்தக்காரர்களும் பின்பற்ற வேண்டும் என்று மேயர் பேசினார். 

ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன் துணைப் பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனீர் அகமது, உதவி ஆணையர் கல்யாண சுந்தரம், இளநிலை பொறியாளர்கள் செல்வம், பாண்டி, லெனின், அமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory