» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பிளைவுட்கள் எரிந்து தீவிபத்து
வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:40:13 AM (IST)

தூத்துக்குடியில் பழைய பிளைவுட்கள், மரக் கட்டைகள் தீப்பிடித்து எரிந்ததில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தூத்துக்குடியில் கோரம்பள்ளம், அய்யனடைப்பு, கலாம் நகரில் குவித்து வைக்கப் பட்டிருந்த பழைய பிளைவுட்கள், மரக் கட்டைகள், மற்றும் முள்செடிகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், சுற்றிலும் பல குடியிருப்பு வீடுகளுக்கு தீ பரவும் அபாயம் இருந்ததால் தூத்துக்குடி நிலைய தண்ணீர் லாரி, ஓட்டப்பிடாரம் நிலைய தீயணைப்பு ஊர்தி, தனியார் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு 7 மணி நேரம் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










