» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பிளைவுட்கள் எரிந்து தீவிபத்து

வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:40:13 AM (IST)



தூத்துக்குடியில் பழைய  பிளைவுட்கள், மரக் கட்டைகள் தீப்பிடித்து எரிந்ததில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தூத்துக்குடியில் கோரம்பள்ளம், அய்யனடைப்பு, கலாம் நகரில் குவித்து வைக்கப் பட்டிருந்த பழைய பிளைவுட்கள், மரக் கட்டைகள், மற்றும் முள்செடிகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், சுற்றிலும் பல குடியிருப்பு வீடுகளுக்கு தீ பரவும் அபாயம் இருந்ததால் தூத்துக்குடி நிலைய தண்ணீர் லாரி, ஓட்டப்பிடாரம் நிலைய தீயணைப்பு ஊர்தி, தனியார் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு 7 மணி நேரம் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory