» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வ.உ.சி. பிறந்தநாளை தேசிய வழக்கறிஞர் தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: கொள்ளு பேத்தி கோரிக்கை

வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:34:08 AM (IST)



வ.உ.சி. பிறந்தநாளை தேசிய வழக்கறிஞர் தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு வ.உ.சி. கொள்ளு பேத்தி செல்வி கோரிக்கை விடுத்துள்ளார். 

சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் 154வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி செல்வி அவரது வீட்டில் வ.உ.சி யின் திருவுரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.இதில் திரைப்பட தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினருமான வழக்கறிஞர் முருகானந்தம், மருத்துவர் அறுவை சிகிச்சை நிபுணர் கபிலாஸ் போஸ், மோனிஷா, மாரிச்செல்வம், வழக்கறிஞர்கள் நாகராஜ் பாண்டியன், சுரேஷ் மற்றும் ஜவகர், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 

இதையடுத்து வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி செல்வி செய்தியாளர்களிடம் பேசுகையில் நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சியின் வெண்கல திருவுருவ சிலை நிறுவ வேண்டும், மேலும் அவரது பிறந்த நாளை தேசிய வழக்கறிஞர் தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்தயுள்ளதாக கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory