» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்பில் சேதம்

வியாழன் 4, செப்டம்பர் 2025 5:53:46 PM (IST)

தூத்துக்குடியில் திருமண விழா அலங்காரப் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் பூபால ராயா். இவா், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கான அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இப்பணிக்கான பொருள்களை அருணா நகா் பகுதியில் உள்ள தனது சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்தாா். இந்நிலையில் இன்று மாலையில், அந்தக் கிடங்கில் தீ விபத்து நேரிட்டதாம். 

அப்போது, காற்றின் வேகமாக வீசியதால் தீ மள மளவென பற்றி எரியத் தொடங்கியது. இத்தகவலறிந்த தூத்துக்குடி தீயணைப்பு அலுவலா் கணேசன், நிலைய உதவி அலுவலா் நட்டாா் ஆனந்தி தலைமையிலான வீரா்கள், 3 வாகனங்களில் வந்து போராடி தீயை அணைத்தனர். எனினும், சுமாா் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory