» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்!

வியாழன் 4, செப்டம்பர் 2025 10:15:30 AM (IST)



தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் அதன் அருகில் இருக்கும் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். கல்லூரி முன்புள்ள சாலை ஆயிரக்கணக்கான வாகனங்களும், பொதுமக்களும் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலையாக இருக்கிறது. எனவே, அப்பகுதியில் விபத்துக்களை தடுக்க கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் முஹம்மது ஹசன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சேமா சந்தனராஜ் பாண்டியன், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் சுஜித்,தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் பிரசாத், தமிழ் புலிகள் கட்சி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

அதுSep 4, 2025 - 05:50:23 PM | Posted IP 172.7*****

நம்ம ஊரு மக்கள் தேர்ந்தெடுத்த AC இல் சொகுசாக வாழும் அரசியல்வாதிகளுக்கு மூளை இல்லை. துட்டு புத்தி தான் இருக்கும் , இருக்கிற சாலைகளை கண்டுக்க துப்பில்லை .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory