» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:04:36 AM (IST)
கோவில்பட்டியில் 10 கிலோ கஞ்சாவைப் பதுக்கிய வழக்கில் கைதான 3பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்துக்குள்பட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், போலீசார் ரோந்து சென்றனர்.
அங்குள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த காரை சோதனையிட்டபோது, கோவில்பட்டி சாஸ்திரி நகர் ராமையா மகன் சங்கிலிபாண்டி (39), கணேஷ்நகர் நடராஜ் மகன் நாகராஜ் (23), தூத்துக்குடி டி.என்.டி. காலனி மாடசாமி மகன் மகாராஜா ஆகியோர் 10 கிலோ கஞ்சாவைப் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து கஞ்சா, 2 கார்களைப் பறிமுதல் செய்தனர். மூவரையும் கைது செய்து தூத்துக்குடி பேராவூரணி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் அளித்த அறிக்கை, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரை ஆகியவற்றின் பேரில், மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் க. இளம்பகவத் உத்தரவிட்டார். அதன்பேரில், மூவரும் நேற்று குண்டர் தடுப்பு காவலுக்கு பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்தச் சட்டத்தின்கீழ் நிகழாண்டு இதுவரை 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










