» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது : இருசக்கர வாகனம் பறிமுதல்

புதன் 3, செப்டம்பர் 2025 8:16:12 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார், நேற்று மேல அழகாபுரி பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற இரண்டு இளைஞர்களை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. 

விசாரணையில், அவர்கள் சிலுவைப்பட்டி, சுனாமி காலனியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மகன் அந்தோணிராஜ் (19), மேற்கு சுனாமி காலனியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் சுப்பிரமணியன் (18) எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 20 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory