» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோழி பண்ணையில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
வியாழன் 15, மே 2025 11:16:12 AM (IST)
மாசார்பட்டி அருகே மின்சாரம் தாக்கி கோழி பண்ணை ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி அருகில் உள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கன் மகன் கருப்பசாமி (45). இவர் அங்குள்ள செல்வராஜ் என்பவரின் கோழி பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று மாலை கோழிப்பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் கருப்பசாமி உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் போலீசார் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கருப்பசாமி உடலை மீட்டு பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










