» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோழி பண்ணையில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

வியாழன் 15, மே 2025 11:16:12 AM (IST)

மாசார்பட்டி அருகே மின்சாரம் தாக்கி கோழி பண்ணை ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி அருகில் உள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கன் மகன் கருப்பசாமி (45). இவர் அங்குள்ள செல்வராஜ் என்பவரின் கோழி பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று மாலை கோழிப்பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் 

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் கருப்பசாமி உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் போலீசார் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கருப்பசாமி உடலை மீட்டு பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory