» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாளுடன் வலம் வந்த 2பேர் கைது!

வியாழன் 15, மே 2025 10:50:38 AM (IST)

தூத்துக்குடியில் வாளுடன் வலம் வந்த வாலிபர்கள் 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

தூத்துக்குடி அண்ணா நகர் 6வது தெருவில் தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள பள்ளிவாசல் அருகே நின்று காெண்டிருந்த 2பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தபோது ஒரு வாளை பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து 2 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் தூத்துக்குடி அண்ணா நகர் 9வது தேர்வை சேர்ந்த பாலு மகன் அஜித்குமார் (28), பாத்திமா நகரை சேர்ந்த ஆலன் மகன் பெண்கர் (38) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory