» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்வீட் கடையில் தீவிபத்து: நாசரேத்தில் பரபரப்பு
வியாழன் 15, மே 2025 10:30:26 AM (IST)

நாசரேத்தில் பேருந்து நிலையம் அருகே வணிக வளாகத்தில் உள்ள ஸ்வீட் கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் செந்தில் ஸ்வீட்ஸ் என்ற கடையும், முத்தூட் பின்கார்ப் நிறுவனமும் இயங்கி வருகிறது. இந்த இடம் பஸ்ஸ்டாண்ட் அருகில் என்பதால் மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த சூழ்நிலையில் இன்று அதிகாலை கடையின் உள்ளே இருந்து கரும்புகை வந்ததால் கடை உரிமையாளர்க்கு தெரிவித்தனர்.
மேலும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறை அதிகாரி ஜான்சன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து தீயை அணைத்தனர். இதனால் கடைகளுக்கு தீபரவாமல் தடுக்கப்பட்டது. பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீவிபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










