» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்வீட் கடையில் தீவிபத்து: நாசரேத்தில் பரபரப்பு

வியாழன் 15, மே 2025 10:30:26 AM (IST)



நாசரேத்தில் பேருந்து நிலையம் அருகே வணிக வளாகத்தில் உள்ள ஸ்வீட் கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் செந்தில் ஸ்வீட்ஸ் என்ற கடையும், முத்தூட் பின்கார்ப் நிறுவனமும் இயங்கி  வருகிறது. இந்த இடம் பஸ்ஸ்டாண்ட் அருகில் என்பதால் மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த சூழ்நிலையில் இன்று அதிகாலை கடையின் உள்ளே இருந்து கரும்புகை வந்ததால்  கடை உரிமையாளர்க்கு தெரிவித்தனர்.

மேலும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறை அதிகாரி ஜான்சன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து தீயை அணைத்தனர். இதனால் கடைகளுக்கு தீபரவாமல் தடுக்கப்பட்டது. பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீவிபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory