» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.99 இலட்சம் மதிப்பில் 7 புதிய திட்டப் பணிகள் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
வியாழன் 15, மே 2025 10:20:59 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.99 இலட்சம் செலவில் முடிவுற்ற 7 திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக. தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.16 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தினையும், சத்திரம் பகுதியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.14 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும், லெவிஞ்சிபுரம் பகுதியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.14 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும்,
ஜார்ஜ் ரோடு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.14.50 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும், குரூஸ்புரம் மற்றும் அமுதா நகர் பகுதிகளில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் M.M.அப்துல்லா தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.27 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்களையும்
அமுதா நகர் பகுதியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் M.M.அப்துல்லா தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.13.50 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும் என மொத்தம் ரூ.99 இலட்சம் செலவில் முடிவுற்ற 7 திட்டப் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள அறிவியல் பூங்காவில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களின் கோடை கால விடுமுறையை பயனுள்ள அறிவுப்பயணமாக மாற்றும் நோக்கத்தில், ஏனென்று கேள் எனும் தலைப்பில் நடைபெற்றுவரும் கோடை கால அறிவியல் பயிற்சி முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் .கனிமொழி கருணாநிதி பார்வையிட்டு, வினாடி வினாப் போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் முனைவர் ஆர்.சாந்தகுமாரி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் எஸ்.ஆர்.சேதுராமன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










