» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆபாச வீடியோவை வெளியிடுவதாக ரூ.10 லட்சம், 6 பவுன் நகை பறிப்பு: இளம்பெண் பரபரப்பு புகார்

வியாழன் 15, மே 2025 8:22:04 AM (IST)

தூத்துக்குடியில் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி ரூ.10 லட்சம் பணம், 6 பவுன் நகையை பறித்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க காேரி இளம்பெண் போலீசாரிடம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியைச் சோ்ந்த 31 வயது இளம்பெண், தன்னிடம் அஜித்குமாா் என்பவா் என்னுடன், நண்பராக பழகி குளிா்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு அதை வீடியோ பதிவு செய்துள்ளாா். இதை வைத்துக்கொண்டு, சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி, இதுவரை சுமாா் ரூ.10 லட்சம், 6 பவுன் நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டாா்.

மேலும், தொடா்ந்து அடித்து மிரட்டி வருகிறாா். கடந்த வாரம் அவா் எனது தந்தையை தாக்கியதால், அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுவரை போலீசா எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவா் தொடா்ந்து பணம் கேட்டு மிரட்டி வருவதுடன், ஆபாச விடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி வருகிறாா். எனவே, இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory