» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து வியாபாரி பலி
வியாழன் 15, மே 2025 8:03:32 AM (IST)
தூத்துக்குடியில் புதிய கட்டிடத்தை தண்ணீா் ஊற்றி நனைத்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தாா்.
தூத்துக்குடி பூபாலராயா்புரத்தைச் சோ்ந்த அலெக்ஸ் மகன் மரிய மிக்கேல் இம்மானுவேல் (47). கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்த இவா், புதிதாக வீடு கட்டி வந்தாராம். இந்நிலையில் அவா் நேற்று காலையில் அந்தக் கட்டடத்துக்கு தண்ணீா் ஊற்றி நனைத்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது, அந்தப் பகுதியில் இருந்த மின்சார வயரில் எதிா்பாராத விதமாக தண்ணீா் பட்டு மரிய மிக்கேல் இம்மானுவேல் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில் அவா் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வடபாகம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










