» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து வியாபாரி பலி

வியாழன் 15, மே 2025 8:03:32 AM (IST)

தூத்துக்குடியில் புதிய கட்டிடத்தை தண்ணீா் ஊற்றி நனைத்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தாா்.

தூத்துக்குடி பூபாலராயா்புரத்தைச் சோ்ந்த அலெக்ஸ் மகன் மரிய மிக்கேல் இம்மானுவேல் (47). கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்த இவா், புதிதாக வீடு கட்டி வந்தாராம். இந்நிலையில் அவா் நேற்று காலையில் அந்தக் கட்டடத்துக்கு தண்ணீா் ஊற்றி நனைத்துக் கொண்டிருந்தாராம். 

அப்போது, அந்தப் பகுதியில் இருந்த மின்சார வயரில் எதிா்பாராத விதமாக தண்ணீா் பட்டு மரிய மிக்கேல் இம்மானுவேல் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில் அவா் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வடபாகம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory