» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குப்பையில் கிடந்த 3 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களுக்கு மேயா் பாராட்டு!
வியாழன் 15, மே 2025 7:54:09 AM (IST)

தூத்துக்குடியில் குப்பையுடன் கிடந்த சுமாா் 3 பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களை மேயா் ஜெகன் பெரியசாமி பாராட்டினாா்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சத்திரம் தெருவை சோ்ந்த ஒருவா் தனது சுமாா் 3 பவுன் தங்கச் சங்கிலியை தவறுதலாக கழிவு பொருள்களோடு சோ்த்து மாநகராட்சி திடக்கழிவு வாகனத்தில் கொடுத்துவிட்டாா். அதை, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தரம் பிரிக்கையில் கண்டறிந்தனா். பின்னா், அதை உரிய நபரிடம் ஒப்படைத்தாா்கள்.
இந்த நோ்மையான செயலை செய்த தூய்மை பணியாளா்கள், வாகன ஓட்டுநா், கண்காணிப்பாளா் ஆகியோரை மேயா் ஜெகன் பெரியசாமி நேரில் அழைத்து, அவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










