» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குப்பையில் கிடந்த 3 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களுக்கு மேயா் பாராட்டு!

வியாழன் 15, மே 2025 7:54:09 AM (IST)



தூத்துக்குடியில்  குப்பையுடன் கிடந்த சுமாா் 3 பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களை மேயா் ஜெகன் பெரியசாமி பாராட்டினாா்.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சத்திரம் தெருவை சோ்ந்த ஒருவா் தனது சுமாா் 3 பவுன் தங்கச் சங்கிலியை தவறுதலாக கழிவு பொருள்களோடு சோ்த்து மாநகராட்சி திடக்கழிவு வாகனத்தில் கொடுத்துவிட்டாா். அதை, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தரம் பிரிக்கையில் கண்டறிந்தனா். பின்னா், அதை உரிய நபரிடம் ஒப்படைத்தாா்கள். 

இந்த நோ்மையான செயலை செய்த தூய்மை பணியாளா்கள், வாகன ஓட்டுநா், கண்காணிப்பாளா் ஆகியோரை மேயா் ஜெகன் பெரியசாமி நேரில் அழைத்து, அவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory