» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி திருமணி ஆலயத்தில் சித்திரைத் திருவிழா

வியாழன் 15, மே 2025 7:45:24 AM (IST)



தூத்துக்குடி தபால் தந்தி காலனி மேற்கு பகுதி திருமணி ஆலயத்தில் சித்திரைத் திருவிழா  3 நாட்கள் நடைபெற்றது

முதல் நாள் 11ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் படை  கஞ்சி வழங்கப்பட்டது இரவு சிறப்பு பூஜை நடந்தது. இரண்டாம் நாள் 12ஆம் தேதி காலை செட்டியா பத்து ஐந்து வீட்டு பெரியசாமி ஆலயத்திலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. இரவு பௌர்ணமி தின திருவிளக்கு பூஜை நடந்தது. 

மூன்றாம் நாள் 13ஆம் தேதி காலை புனித தீர்த்தம் கொண்டு ஸ்ரீ துளசி பெருமாள் ஸ்ரீ வர்ணி அம்மாள் ஸ்ரீ ஆத்திச்சாமி ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ தசவாதார மூர்த்திகள் ஸ்ரீ துளசி விநாயகர் 8 பட்டம் கொண்ட கல் தூண் ஆகியோருக்கு விசேஷ வருஷாபிஷேகம் நடைபெற்றது. 

தொடர்ந்து திருமணி அன்பர்களின் கூட்டு பணிவிடை  பின் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் பூசாரியும் தொல்லியல் ஆர்வலர் மான பெ. ராஜேஷ் செல்வரதி மற்றும் திருமணி அன்பர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory