» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
துறைமுகத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பரிதாப சாவு : பீகார் மாநில வாலிபர் படுகாயம்!
புதன் 14, மே 2025 4:53:27 PM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பரிதாபமாக இறந்தார் பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தில் வசிப்பவர் வெள்ளத்துரை இவருடைய மகன் வேல்முருகன் (23). டிப்பர் லாரி டிரைவர் ஆன இவர் இன்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் உள்ள ஒரு குடோனில் புண்ணாக்கு மூடைகளை இறக்கிவிட்டு மீண்டும் புதிய துறைமுகம் மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக செல்லும்போது ரோடு ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் யாதவ் (35) என்பவர் மீது லாரி மோதியதில் லாரி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் வேல்முருகன் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் யாதவ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










