» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துறைமுகத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பரிதாப சாவு : பீகார் மாநில வாலிபர் படுகாயம்!

புதன் 14, மே 2025 4:53:27 PM (IST)



தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பரிதாபமாக இற‌ந்தார் பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தில் வசிப்பவர் வெள்ளத்துரை இவருடைய‌ மகன் வேல்முருகன் (23). டிப்பர் லாரி டிரைவர் ஆன இவர் இன்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் உள்ள ஒரு குடோனில் புண்ணாக்கு மூடைகளை இறக்கிவிட்டு மீண்டும் புதிய துறைமுகம் மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேகமாக செல்லும்போது ரோடு ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் யாதவ் (35) என்பவர் மீது லாரி மோதியதில் லாரி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் வேல்முருகன் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இற‌ந்தார். படுகாயம் அடைந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் யாதவ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory