» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் 16ம் தேதி : கீதாஜீவன் அறிக்கை!

புதன் 14, மே 2025 11:49:20 AM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16ம் தேதி கலைஞர் அரங்கத்தில் வைத்து நடைபெறுவதாக அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்குகிறார். திமுக துணை பொதுச்செயலாளரும், பாராளுமன்ற குழுத்தலைவருமான கனிமொழி கருனாநிதி எம்.பி., கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். 

கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்த இந்த கூட்டத்திற்கு மாநில அணி துணைச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழ், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பகுதி பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ளுமாறு அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory