» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆம்னி பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: 2பேர் கைது!

செவ்வாய் 13, மே 2025 9:44:16 PM (IST)

சாத்தான்குளத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநரை தாக்கிய 2பேரை போலீசார் கைது செய்தனர். 

திருவள்ளூவர் மாவட்டம் கீழநெடுங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ வேலு மகன் சூர்யபாபு (36). இவர் சாத்தான்குளத்தில் இருந்து சென்னை செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் ஓட்டுநராக உள்ளார். இவரது புகாரின் பேரில் அதே பேருந்தில் ஓட்டுநராக இருந்த கஜேந்திரன், உதவியாளர் சுரேஷ் ஆகியோரை பேருந்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வேலையை வீட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த கஜேந்திரன், மற்றும் சுரேஷ், நேற்று சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் பேருந்து புறப்பட்டபோது வழிமறித்து ஓட்டுநர் சூரியபாபுவை அவதூறாக பேசி அவரை தாக்கினர் மேலும் அவர் அணிதிருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலி மாயமானது. இதில் பலத்த காயமிடைந்த சூர்யபாபு சாத்தான்குளம்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர், முருகேசன் வழக்குபதிந்து கஜேந்திரன், சுரேஷ் ஆகியோரை கைது செய்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory