» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாத்தான்குளத்தில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
செவ்வாய் 13, மே 2025 9:40:45 PM (IST)
சாத்தான்குளத்தில் இன்று மாலை திடீரென மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததையடுத்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் கத்தரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதன் பிறகு வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. சாத்தான்குளம் பகுதியில் காலை முதல் மாலை வரை கடும் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் இருந்து வந்தனர். பலர் வீடுகளில் முடங்கினர். இந்தநிலையில் சாத்தான்குளம் பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் திடீரென மழை பெய்தது.
இந்த மழை அரை மணி நேரம் பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது திடீரென பலத்த காற்று வீசியது. இதனையடுத்து திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சீரமடைந்தனர். அதன் ஒரு மணி நேரத்திற்கு மின் விநியோகம் சீரானது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










