» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளத்தில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

செவ்வாய் 13, மே 2025 9:40:45 PM (IST)

சாத்தான்குளத்தில் இன்று மாலை திடீரென மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததையடுத்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் கத்தரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதன் பிறகு வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. சாத்தான்குளம் பகுதியில் காலை முதல் மாலை வரை கடும் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் இருந்து வந்தனர். பலர் வீடுகளில் முடங்கினர். இந்தநிலையில் சாத்தான்குளம் பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் திடீரென மழை பெய்தது.

இந்த மழை அரை மணி நேரம் பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது திடீரென பலத்த காற்று வீசியது. இதனையடுத்து திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சீரமடைந்தனர். அதன் ஒரு மணி நேரத்திற்கு மின் விநியோகம் சீரானது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory