» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் படகு ஓட்டுநர் பயிற்சி நிறைவு விழா : 20 மீனவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

செவ்வாய் 13, மே 2025 5:50:36 PM (IST)



தூத்துக்குடியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையானது, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் நடத்தும் ‘‘படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி" என்ற ஒரு வாரகால உள்வளாகப்; பயிற்சியானது 05.05.2025 முதல் 12.05.2025 வரை நடைபெற்றது. 

இதன் நிறைவு விழாவானது இன்று தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் வைத்து நடைபெற்றது. இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 20 மீனவர்கள் கலந்து கொண்டனர். மேலும், பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த அனைத்து மீனவர்களுக்கு, நிறைவு விழாவின் போது படகு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது.

மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் த. ரவிக்குமார் வரவேற்புரையாற்றினார். நிறைவு விழாவிற்கு மீன்வளக்கல்லூரி முதல்வர் அகிலன், தலைமையேற்று பேசுகையில், "ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் இந்தப் பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பங்கு குறித்து அவர் பேசினார். 

இவ்விழாவில் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, இணை இயக்குநர் ந. சந்திரா, தூத்துக்குடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், மீன்பிடித் தடைக் காலத்தில் அதிகமான மீனவர்களுக்கு இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உதவி இயக்குநர் க. ஜெனார்த்தனம், மீன்வள ஆய்வாளர் மேரி வெஸ்னா வாழ்த்துரை வழங்கினர். உதவிப் பேராசிரியர் ச. மாரியப்பன் நன்றியுரை ஆற்றினார். அ. அந்தோணி மைக்கேல் பிரபாகர், உதவிப் பொறியாளர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory