» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டாஸ்மார்க் கடையில் மது அருந்திய வாலிபருக்கு உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய் 13, மே 2025 4:58:36 PM (IST)

சாத்தான்குளம் அருகே டாஸ்மார்க் கடையில் காலாவதியான மதுவை வாங்கி குடித்ததால் வாலிபருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் டாஸ்மாக் கடையில் தேர்க்கன்குளத்தை சேர்ந்த உத்திரம் என்பவரின் மகன் இசக்கி (32) என்பவர் மது வாங்கி அருந்தியுள்ளார். மது அருந்திய சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிறு வலி அதிகமாக இருந்த காரணத்தினால் உடனடியாக அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

மேற்படி இசக்கி வாங்கி குடித்த மதுவானது காலாவதியானது என்றும், அதனால்தான் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டு உள்ளது என்றும் அங்கிருந்த மது பிரியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பேய்குளம் டாஸ்மார்க் கடையில் காவல்துறையினர் கெட்டுப்போன மது பாட்டில்கள் உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். இது அப்பகுதி மது பிரியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory