» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இராணிமகாராஜபுரத்தில் ரூ.35 லட்சத்தில் துணை சுகாதார மையம் திறப்பு விழா

செவ்வாய் 13, மே 2025 4:53:16 PM (IST)



இராணிமகாராஜபுரத்தில் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மையத்தை ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி சிறப்பு நிலை பேரூராட்சி இராணி மகாராஜபுரத்தில் ரூ. 35.00 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆறுமுகநேரி பேரூராட்சி மன்ற தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துணை சுகாதார மைய கட்டிடத்தை திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் உஷா, ஊர் நிர்வாகி தலைவர் டாக்டர் அருள் செந்தேன், செயலாளர் முத்துலிங்க பாண்டியன், 14வது வார்டு கவுன்சிலர் எம் பி சரவணன், நிர்மலா, வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் ஹமிது ஹில்மி, சோனகன் விளை மருத்துவ அலுவலர் டாக்டர் செய்யது அகமது, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்க செல்வன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் மருத்துவமனைக்கு நிரந்தரமாக ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும் என ஊர் மக்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory