» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது : அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

செவ்வாய் 13, மே 2025 3:47:06 PM (IST)

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அளித்த பேட்டியில் "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி  நிலை நாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும் உறுதியாக இருந்த பெண்களை பாராட்டுகிறேன். 

இந்த தீர்ப்பு மக்களிடையே, பெண்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த ரகசியம் காத்த சிபிஐ மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள். இந்த தீர்ப்பின் மூலம் குற்றச்செயல்களை புரிபவர்களுக்கும், துணை போவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தும். இந்த தீர்ப்பின் மூலம் பாலியல் குற்றங்கள் குறையும். 

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்பது போல, இந்த குற்றச்செயல் குறித்து புகார் மனு அளித்தபோது அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் வழக்குப் பதிவு செய்யவில்லை. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தான் கடுமையான சட்டப் போராட்டங்களை நடத்தி வழக்குப் பதிவு செய்தார். அதுபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு தமிழக முதல்வர் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory