» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மகனுடன் இளம்பெண் திடீர் மாயம்!

செவ்வாய் 13, மே 2025 12:09:07 PM (IST)

தூத்துக்குடியில் 2வயது மகனுடன் இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மீ.க. தெருவைச் சேர்ந்தவர் முகைதீன் பிச்சை. இவரது மனைவி ரிஸ்வானா பர்வீன் (22), இந்த தம்பதிகளுக்கு அல் சபா (2) என்ற மகன் உள்ளான். முகைதீன் பிச்சை வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் ரிஸ்வானா பர்வீன் தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 25ஆம் தேதி தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து புகாரன் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இவர்களைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் 9498193727, 9498101883 நம்பருக்கு தகவல் தெரிவிக்கும் படி இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory