» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிமெண்ட், கம்பி விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கட்டுமானப் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 13, மே 2025 8:52:21 AM (IST)

சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
தரமான கல் குவாரி பொருள்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரி உரிமையாளர்களின் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக் கற்கள் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும். குவாரிகளை பொதுப்பணித் துறை மூலம் அரசே ஏற்று நடத்த வேண்டும்.
சிமெண்ட் கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி, கோவில்பட்டி கட்டுமானப் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், விவிடி சிக்னல் அருகே கட்டடப் பொறியாளர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க சாசனத் தலைவர் ஹென்றி டேனியல் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் ஜாண்சன், முன்னாள் தலைவர் குமரேசன், செயலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










