» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிமெண்ட், கம்பி விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கட்டுமானப் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 13, மே 2025 8:52:21 AM (IST)



சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தரமான கல் குவாரி பொருள்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரி உரிமையாளர்களின் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக் கற்கள் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும். குவாரிகளை பொதுப்பணித் துறை மூலம் அரசே ஏற்று நடத்த வேண்டும். 

சிமெண்ட் கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி, கோவில்பட்டி கட்டுமானப் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், விவிடி சிக்னல் அருகே கட்டடப் பொறியாளர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க சாசனத் தலைவர் ஹென்றி டேனியல் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் ஜாண்சன், முன்னாள் தலைவர் குமரேசன், செயலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory