» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காரில் மதுபானங்களை கடத்தியவர் கைது: 144 மது பாட்டில்கள் பறிமுதல்

திங்கள் 12, மே 2025 8:46:45 PM (IST)

சாத்தான்குளம் அருகே காரில் மதுபானங்களை கடத்தியவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 144 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் சுடலை கோயில் அருகில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் போலீசார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை மறித்து சோதனை நடத்தினர். அதில் 144 எண்ணம் கொண்டு மதுபாட்டில் பெட்டி 3 இருந்தது தெரியவந்தது. 

உடன் போலீசார் விசாரணை நடத்தியதில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ராமானுஜம் புதூர் இந்திரா நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் சுடலை (34) எனரும், அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் கொண்டு வந்தது தெரியவந்தது. உடன் போலீசார் அவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory