» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புன்னக்காயல் பெயர் பலகையை சீரமைக்க கோரிக்கை!

திங்கள் 12, மே 2025 8:28:50 PM (IST)



புன்னக்காயல் பெயர் பலகையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
தமிழகமெங்கும் சமவெளி நகர மக்களோடு மீனவ கிராமம் ஒரமாக ஒது(ங்)கியே வாழ்வில் இருப்பிடம் அமையும். காரணம் அவர்களின் தொழில்முறை பூமிவியல் அமைப்பிற்கேற்ப கடலேயோட்டியே கடற்கரை ஊரும் அமையும். பொதுசமவெளி மக்களோடு கடற்கரை ஊரை அடையாளப்படுத்தி, நினைவூட்டுதல் செய்வதே நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பு பதாகை மட்டுமே புன்னக்காயல் அரசின் அறிவிப்பு பதாகை நசுங்கி,ஒடிந்து கீழே விழுந்ததை பொது மக்களே தூக்கி கயிறால் கட்டி தூக்கி பிடிக்கும் நிலைமை??

புன்னக்காயல் வரலாற்று பெருமைமிகு முதல் தமிழ் அச்சுக்கூடம் அமைந்த,பொருநை தாய் சங்கமிக்கும் சங்குமுக (இந்துக்கள் முன்னோரை நினைத்து ஆடி அம்மாவாசை திதி வழிபடும் சங்குமுக ஈஸ்வரன் கோவில்) துறைமுகம் அமைய பெற்ற ஊர், பக்தர்களும், சுற்றுலா விரும்பிகளும் அதிகம் வரும் புன்னக்காயல் ஊருக்கு பயணம் செய்ய ஒரே ஒரு வழிப்பாதை தான் இருக்கும் பட்சத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்பில் ஆத்தூர் (மணி ஹோட்டல் எதிர்) நகரத்தில் இருப்பதை புதுப்பித்து புதுபொலிவு செய்து தர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஆழிபுத்திரன்@தாமஸ கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory