» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனியார் விடுதியில் தம்பதியரிடம் நகை, பணம் திருட்டு : போலீசார் விசாரணை
திங்கள் 12, மே 2025 9:15:04 AM (IST)
ஆறுமுகநேரியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த தம்பதியரின் 2 பவுன் தங்க நகை மற்றும் பணம் திருடுபோனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையை சேர்ந்தவர் ஞானஅகஸ்டின். இவரது மனைவி மகேஸ்வரி(38). இத்தம்பதியர் திருச்செந்தூர் கோவில் அருகே பழவியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள், ஆறுமுகநேரி பஜாரில் காயல்பட்டினம் சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்து தினமும் காலையில் வியாபாரத்துக்கு சென்று விட்டு இரவு விடுதி அறையில் வந்து தங்குவது வழக்கம்.
நேற்று முன் தினம் காலையில் விடுதியில் இருந்து புறப்பட்டு சென்ற தம்பதியர், வியாபாரத்தை முடித்து ெகாண்டு இரவு திரும்பி வந்துள்ளனர். அப்போது விடுதி அறைக்கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த ரூ.15 ஆயிரம், 2 பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இந்த விடுதியில் தம்பதியர் இருந்த அறைக்கு பக்கத்தில் தங்கியிருந்த நபர் தலைமைைறவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










