» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தனியார் விடுதியில் தம்பதியரிடம் நகை, பணம் திருட்டு : போலீசார் விசாரணை

திங்கள் 12, மே 2025 9:15:04 AM (IST)

ஆறுமுகநேரியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த தம்பதியரின் 2 பவுன் தங்க நகை மற்றும் பணம் திருடுபோனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நெல்லையை சேர்ந்தவர் ஞானஅகஸ்டின். இவரது மனைவி மகேஸ்வரி(38). இத்தம்பதியர் திருச்செந்தூர் கோவில் அருகே பழவியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள், ஆறுமுகநேரி பஜாரில் காயல்பட்டினம் சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்து தினமும் காலையில் வியாபாரத்துக்கு சென்று விட்டு இரவு விடுதி அறையில் வந்து தங்குவது வழக்கம். 

நேற்று முன் தினம் காலையில் விடுதியில் இருந்து புறப்பட்டு சென்ற தம்பதியர், வியாபாரத்தை முடித்து ெகாண்டு இரவு திரும்பி வந்துள்ளனர். அப்போது விடுதி அறைக்கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த ரூ.15 ஆயிரம், 2 பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இந்த விடுதியில் தம்பதியர் இருந்த அறைக்கு பக்கத்தில் தங்கியிருந்த நபர் தலைமைைறவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory