» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது வாகனம் மோதி விபத்து பெண் பலி: கணவர் படுகாயம்

திங்கள் 12, மே 2025 9:10:16 AM (IST)

நாலாட்டின்புத்தூர் அருகே தம்பதியர் சென்ற பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள மந்தித்தோப்பு துளசி நகரை சேர்ந்தவர் வீரன் (68). விவசாயி. இவருடைய மனைவி குருவம்மாள் (61). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இருவரும் நாகம்பட்டி அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். 

நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புத்தூர் அருகே தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் குருவம்மாள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory