» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டில் பதுக்கிய 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் : வாலிபர் கைது

திங்கள் 12, மே 2025 9:05:32 AM (IST)

கோவில்பட்டியில் விற்பனைக்காக 1¼ கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி- எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேகா தலைமையிலான போலீசார் எட்டயபுரம் ரோட்டில் குறிப்பிட்ட வீடு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

அப்போது அங்குள்ள தனியார் இருசக்கர வாகன ஷோரூம் அருகே ஒரு வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆட்கள் நடமாட்டம் இருந்தது. உடனடியாக போலீசார் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். வீட்டிற்கு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அந்த வீட்டிற்குள் இருந்த சிலர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

அந்த வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த வாலிபர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில், அவர் கோவில்பட்டி பாரதிநகர் மேட்டு தெருவை சேர்ந்த மூக்கையா மகன் மாரிச்செல்வம் (25) என்பதும், இவர் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, எட்டயபுரம் ரோட்டில் உள்ள இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து, கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிசெல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory