» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் செல்போன் திருடிய வாலிபர் கைது!

திங்கள் 12, மே 2025 8:44:13 AM (IST)

கோவில்பட்டியில் பைக் டேங்க் கவரில் வைத்திருந்த செல்போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இந்திரா நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் சரவணகுமார் (23). எலக்ட்ரீஷியனான இவர், நேற்று கிழக்கு பார்க் சாலை அருகே தனது பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரில் கைப்பேசியை வைத்துவிட்டு அருகேயுள்ள கடைக்குச் சென்றார்.

அப்போது, கைப்பேசியை ஓர் வாலிபர் திருடிக்கொண்டு ஓடினாராம். சரவணகுமார் அப்பகுதியினரின் உதவியுடன் அவரைப் பிடித்து மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த வாலிபர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தாலைச் சேர்ந்த அருணாசலம் மகன் முத்துராஜா (19) எனத் தெரியவந்தது. அவரை போலீசார்கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory