» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் 50 அடிக்கு கடல் உள்வாங்கியது!

திங்கள் 12, மே 2025 8:39:56 AM (IST)

திருச்செந்தூர் கோவில் அருகே கடல்நீர் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டது. 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாரதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. 

சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பள்ளி தொடர் விடுமுறை என்பதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் திரளான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே கடல்நீர் அமாவாசை, பௌர்ணமி நாள்களில் கடல்நீர் உள்வாங்குவதும் பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் அண்மைக்காலமாக தொடர்ந்து நிகழ்கிறது. இந்த நிலைியல் நேற்று, சுமார் 50 அடிக்கு கடல்நீர் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படர்ந்த பாறைகள். எனினும், பக்தர்கள் வழக்கம்போல நீராடினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory