» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

திங்கள் 12, மே 2025 8:35:19 AM (IST)

கயத்தாறு அருகே மனைவியின் வளைகாப்பு நடந்த மறுநாள் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறையடுத்த தெற்கு கோனார்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த சங்கிலிபாண்டியன் மகன் சங்கிலிகுமார் (35). தொழிலாளியான இவருக்கும், கே.கரிசல்குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணிக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணமானது.

கடந்த 3 மாதங்களாக மதுப் பழக்கத்துக்கு உள்ளான சங்கிலிகுமார், சரிவர வேலைக்குச் செல்லாததுடன், மாடு வாங்குவதற்காக வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த முடியாமல் இருந்தாராம். கடந்த 3ஆம் தேதி கிருஷ்ணவேணிக்கு வளைகாப்பு நடத்தி பெற்றோர் அழைத்துச் சென்றுவிட்டனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் சங்கிலிகுமார் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். தகவலின்பேரில், கயத்தாறு போலீசார் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory