» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி: அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஸ்ட்ரைக் தொடர்கிறது!

ஞாயிறு 11, மே 2025 9:51:20 AM (IST)

தூத்துக்குடியில் 8ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் இன்று 24வது நாளாக தொடர்கிறது.

தூத்துக்குடி தெர்மல் நகரில் மத்திய அரசின்கீழ் செயல்படும் இந்த அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு, நெய்வேலி என்எல்சியில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் இவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. 

ஆனால், என்டிபிஎல் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இதைக் கண்டித்தும், ஊதிய உயர்வு கோரியும் கடந்த ஏப். 18 முதல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திலும், அனல் மின்நிலையம் முன் குடும்பத்துடன் தர்னாவிலும் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தால் அனல்மின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

போராட்டம் தொடர்பாக நிர்வாகத்தின் மேலாண்மை நிர்வாக இயக்குநர் வாஞ்சிநாதன், தலைமைப் பொது மேலாளர் பங்கஜ்குமார், தலைமை செயல் இயக்குநர் அனந்தராமானுஜம், தொழிற்சங்கம் சார்பில் சிஐடியூ மாநிலப் பொதுச் செயலர் ராஜேந்திரன், மாநிலச் செயலர் ஆர். ரசல், மின் ஊழியர் மத்திய அமைப்பு என்டிபிஎல் அனல் மின் நிலையச் செயலர் எஸ். அப்பாத்துரை உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நேற்று நடைபெற்ற 8ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இப்போராட்டம் இன்று 24வது நாளாக தொடர்கிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory