» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் தூய யோவான் பேராலயதில் 97வது பிரதிஷ்டை: அசன பெருவிழா!
ஞாயிறு 11, மே 2025 9:24:08 AM (IST)

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் நாசரேத் தூய யோவான் பேராலயத்தின் 97 வது பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா கடந்த 4 ம் தேதிதொடங்கி 7 நாட்கள் நடந்தது .
முதல் நாள் மாலை 7.30 மணிக்கு நெல்லை வாழ் நாசரேத் வட்டார மக்கள் ஐக்கியம் சார்பில் விஷ்வவாணி மிஷனெரி கலை நிகழ்ச்சிகள் நடந்தது.2 வது நாள் மாலை 7.30 மணிக்கு ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் பஜனை பிரசங்கம் நிகழ்ச்சி நடந்தது.வள்ளியூர் தேவதாசன் பஜனை நடத்தினார்.3 வது நாள் மாலை 7.30 மணிக்கு வாலிபர் ஐக்கிய சங்கம் சார்பில் முன்னாள் ஜான்ஸ் கல்லூரி முதல்வர் ஜாண் கென்னடி குழுவினரின் பட்டி மன்றம் நடந்தது. 4 வது நாள் மாலை 7.30 மணிக்கு நாசரேத் சொர்க்க வாசல் ஜெபக்குழு சார்பில் பேராயர் இராபர்ட் கால்டுவெல் வாழ்க்கை வரலாறு குறித்த ஒலி,ஒளி நாடகம் நடந்தது.
5 வது நாள் மாலை 7.30 மணிக்கு சென்னை வாழ் நாசரேத் மக்கள் சங்கம் சார்பில் ஹெலன் சத்யா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.6 வது நாள் காலை 9.30 மணி முதல் 2 மணி வரை குடும்ப உபவாச கூடுகை நடந்தது .சென்னை அள்ளித்தூவும் விதைகள் ஊழிய நிறுவனர் ரூபன் திலகராஜ் சிறப்பு செய்தி கொடுத்தார். இதனை தொடர்ந்து மாலை 3 மணிக்கு பேராலய வாலிபர் ஐக்கிய சங்க விளையாட்டு போட்டிகள் நடந்தது. அன்று மாலை 6.30 மணிக்கு பிரதிஷ்டை விழிப்பாராதனை நடந்தது.
ஆராதனையில் பாடகர் குழுவின் சிறப்பு பாடல்கள் இடம்பெற்றன. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் (பொறுப்பு) செல்லையா சிறப்பு செய்தி கொடுத்தார். 7வது நாளான சனிக்கிழமை காலை 3.30 மணிக்கு பிரதிஷ்டை அசன பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது மாலை 4 மணிக்கு அசன வைபவம் நிகழ்ச்சி நடந்தது. பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் திரளான பேர்களுக்கு அசன விருந்து வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம், தலைமையில் உதவி குருவானவர் பொன்செல்வின் அசோக்குமார், தூய யோவான் பேராலய அசன கமிட்டி தலைவர் செல்வின் ஜெபக்குமார், உப தலைவர் மர்காஷிஸ் தேவதாஸ், செயலாளர் ஆனந்தராஜ், இணைச்செயலாளர் இளவரசன், பொருளாளர் லேவி அசோக் சுந்தரராஜ், சபை ஊழியர்கள் ஜெபராஜ், ஜெசு மற்றும் அசன கமிட்டிஅலெக்ஸ்.ரஞ்சன் மற்றும் அனைத்து உறுப்பினர்கள், சபை மக்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










