» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு: மஞ்சள் இடித்த சுமங்கலி பெண்கள்!

சனி 10, மே 2025 8:07:07 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை சனி மஹா பிரதோஷ தினத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை சனி மஹா பிரதோஷ தினத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், பழங்கள், சந்தனம், வீபூதி, தேன் உள்ளிட்ட 16 வகை  திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நந்தி பகவான் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 

மஞ்சள் இடித்த சுமங்கலி பெண்கள்



தூத்துக்குடி சிவன் கோவில் இன்று காலை தேரோட்டம் நடந்தது. தேர்  நிலைக்கு வந்த பின்னர் சுவாமி, அம்பாள் கோவிலுக்கு வந்ததும் வாசலில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போது சிவன் கோவில் ஜல துர்க்கை அம்மன் வழிபாட்டு குழு சார்பில் அதன் தலைவர் ஜெயராணி தலைமையில் சுமங்கலி பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்காக மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது,

இதில் ஏராளமான பெண்கள் மஞ்சள் இடித்து வழிபட்டனர். பின்னர் சுவாமி அம்பாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளி அங்கு மஞ்சள் நீராடி அலங்கார தீபாரணை நடந்து பின்னர் திருக்கோவிலை அடைந்தார் இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, மற்றும் ஏராளமான  பெண்கள் கலந்து கொண்டனர். அதன்பின் பெண்களுக்கு மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory