» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு: மஞ்சள் இடித்த சுமங்கலி பெண்கள்!
சனி 10, மே 2025 8:07:07 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை சனி மஹா பிரதோஷ தினத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை சனி மஹா பிரதோஷ தினத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், பழங்கள், சந்தனம், வீபூதி, தேன் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நந்தி பகவான் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மஞ்சள் இடித்த சுமங்கலி பெண்கள்

தூத்துக்குடி சிவன் கோவில் இன்று காலை தேரோட்டம் நடந்தது. தேர் நிலைக்கு வந்த பின்னர் சுவாமி, அம்பாள் கோவிலுக்கு வந்ததும் வாசலில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போது சிவன் கோவில் ஜல துர்க்கை அம்மன் வழிபாட்டு குழு சார்பில் அதன் தலைவர் ஜெயராணி தலைமையில் சுமங்கலி பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்காக மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது,
இதில் ஏராளமான பெண்கள் மஞ்சள் இடித்து வழிபட்டனர். பின்னர் சுவாமி அம்பாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளி அங்கு மஞ்சள் நீராடி அலங்கார தீபாரணை நடந்து பின்னர் திருக்கோவிலை அடைந்தார் இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அதன்பின் பெண்களுக்கு மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










