» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது கார் மோதி விபத்து: டீக்கடை ஊழியர் பலி

சனி 10, மே 2025 8:37:44 AM (IST)

கயத்தாறு அருகே மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த டீக்கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள பன்னீர்ஊத்து கிராமத்தை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் சுப்பிரமணியன் (47). இவர் கங்கைகொண்டானில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். தினமும் இவர் ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம்.

நேற்று காலையில் வீட்டில் இருந்து கங்கைகொண்டானில் உள்ள டீக்கடைக்கு வேலைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அவர் நெல்லை-மதுரை நாற்கர சாலையில் சென்றபோது, எதிரே நாகர்கோவில் இருந்து மதுரைக்கு தனியார் நிதி நிறுவன மேலாளர் ஒருவர் காரில் வந்து கொண்டிருந்தார். அந்த காரை மதுரையை சேர்ந்த சின்ன இருளன் மகன் சின்னகருப்பு(27) ஓட்டி வந்தார்.

கயத்தாறு அருகே தேவர்குளம் நாற்கர சாலையில் எதிர்பாராத விதமாக சுப்பிரமணியன் ஓட்டிச்சென்ற பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியனை அக்கம் பக்கத்தினர் மீ்ட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory